Friday 17th of May 2024 05:00:16 AM GMT

LANGUAGE - TAMIL
வங்காள தேச டி20 தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு!

வங்காள தேச டி20 தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு!


கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து போட்டிகளில் ஓய்வின்றி விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வங்காள தேச டி20 தொடரில் ஓய்வு எடுக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு அணிகளுக்கு எதிராக விளையாடி வரும் விராட் கோலி வங்காளதேச டி20 தொடரில் இருந்து விலகி ஓய்வு எடுக்க உள்ளார்.

ஆஸ்திரேலியா தொடர், ஐபிஎல், உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், தற்போது நடந்து வரும் தென்ஆப்பிரிக்கா தொடர் என்று சற்றும் ஓய்வில்லாமல் விளையாடி வருகிறார். இதனால் வேலைப்பளுவை காரணம் காட்டி வங்காளதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி விராட் கோலி ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளாராம். வங்காளதேச தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வரும் 24-ந்தேதி நடக்கிறது. அப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அப்போது விராட் கோலி ஓய்வு எடுக்கிறாரா இல்லையா என்று தெரிந்து விடும்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE